24 66edc47fe0019
உலகம்செய்திகள்

தெற்காசியாவில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் : எதில் தெரியுமா..!

Share

தெற்காசியாவில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் : எதில் தெரியுமா..!

பாகிஸ்தானில்(pakistan) ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து 13.53 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முறையாளர்கள் வெளியேறி இருப்பதாக பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கை ஒன்றில் இருந்து தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாகிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் 50க்கும் அதிகமான வெளிநாடுகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் அதிக மனித வளங்களைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் இருப்பதோடு கற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் வெளிநாடு செல்வது பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் அந்நாட்டில் பல்வேறு துறைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 92,000 பட்டதாரிகள் மற்றும் 3,500,000 பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் நாட்டை விட்டுச் சென்றிருப்பதோடு, 2,500 மருத்துவர்கள், 6,500 கணக்காளர்கள் மற்றும் 5,534 பொறியியலாளர்கள் இதில் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...

1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...