பாகிஸ்தானில் இன்று (10) அதிகாலை 1:44 மணிக்கு 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது,
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.