GettyImages 1235870887 scaled
உலகம்செய்திகள்

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

Share

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24ம் திகதி கொண்டாடப்படுவதால் நேற்று பள்ளியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, 6ம் வகுப்புக்கு பின் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி Roza Otunbayeva, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், உலக உணவுத் திட்டம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் கல்வி மீதான தடையை நீக்குமாறு தாலிபான்களிடம் கேட்டுக் கொண்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகமான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைவருக்கும் கல்வியை வழங்க தாலிபான்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் ரோசா ஒடுன்பயேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமன்றி முஸ்லிம் உலகிற்கும் கல்வி தேவை என சர்வதேச கல்வி தினத்தில் ஒதுன்பயேவா தெரிவித்தார்.

இஸ்லாத்தில் ஒவ்வொரு நாளும் கல்வி நாள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்வதேச கல்வி தினத்தன்று ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன என்று பெண்கள் உரிமை ஆர்வலர் Tafsir Seyaposh கூறினார். மேலும், தாலிபான்கள் பள்ளிகளைத் திறக்கத் தயாராக வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....