GettyImages 1235870887 scaled
உலகம்செய்திகள்

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

Share

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24ம் திகதி கொண்டாடப்படுவதால் நேற்று பள்ளியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, 6ம் வகுப்புக்கு பின் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி Roza Otunbayeva, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், உலக உணவுத் திட்டம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் கல்வி மீதான தடையை நீக்குமாறு தாலிபான்களிடம் கேட்டுக் கொண்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகமான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைவருக்கும் கல்வியை வழங்க தாலிபான்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் ரோசா ஒடுன்பயேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமன்றி முஸ்லிம் உலகிற்கும் கல்வி தேவை என சர்வதேச கல்வி தினத்தில் ஒதுன்பயேவா தெரிவித்தார்.

இஸ்லாத்தில் ஒவ்வொரு நாளும் கல்வி நாள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்வதேச கல்வி தினத்தன்று ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன என்று பெண்கள் உரிமை ஆர்வலர் Tafsir Seyaposh கூறினார். மேலும், தாலிபான்கள் பள்ளிகளைத் திறக்கத் தயாராக வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...