6 39
உலகம்

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

Share

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

சுற்றுலாப் பயணிகளுக்காக ஜப்பான்(Japan) ஒரு வினோதமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக “ஒரு நாள் மாணவர்” என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பாடசாலையில் மாணவராக ஒரு நாளைக் கழிக்க முடியும் என தெரிவிக்கபடுகிறது.

சிபா ப்ரிபெக்சரில் உள்ள பழைய பாடசாலையில் இந்த திட்டம் நடைபெறுகின்றதுடன் 30,000 யென் மூலம் இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரே நாளில் சான்றிதழை பெறலாம் என கூறப்படுகின்றது.

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் அனுபவிக்க முடியும் என தெரிக்கப்படுகின்றது.

அத்துடன், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திட்டத்தை உண்டோகயா என்ற நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
2025 07 02T141641Z 2 LYNXMPEL610MU RTROPTP 4 HEALTH BIRD FLU
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு: 9 மாதங்களில் பதிவான முதல் மனித

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள்...

ln1efiok top 10 luxury cities of
உலகம்செய்திகள்

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்கள் பட்டியல் வெளியீடு: பிரான்ஸின் பரிஸ் முதலிடம்!

உலக அளவில், வெறும் செல்வத்தை மட்டுமல்லாமல், அதைச் செலவழிக்கும் விதம் மற்றும் அதனுடன் கூடிய வாழ்க்கை...

21113858ad4369b
செய்திகள்உலகம்

பாகிஸ்தான் தொழிற்சாலை வெடி விபத்து: கொதிகலன் வெடித்ததில் 16 தொழிலாளர்கள் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள ஒரு பசை...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...