6 39
உலகம்

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

Share

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

சுற்றுலாப் பயணிகளுக்காக ஜப்பான்(Japan) ஒரு வினோதமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக “ஒரு நாள் மாணவர்” என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பாடசாலையில் மாணவராக ஒரு நாளைக் கழிக்க முடியும் என தெரிவிக்கபடுகிறது.

சிபா ப்ரிபெக்சரில் உள்ள பழைய பாடசாலையில் இந்த திட்டம் நடைபெறுகின்றதுடன் 30,000 யென் மூலம் இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரே நாளில் சான்றிதழை பெறலாம் என கூறப்படுகின்றது.

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் அனுபவிக்க முடியும் என தெரிக்கப்படுகின்றது.

அத்துடன், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திட்டத்தை உண்டோகயா என்ற நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...