13 6
உலகம்செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

Share

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) வெற்றிவாய்ப்பு கணிசமான அளவாக குறைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா (Barrack Obama) கருதுவதாக சர்வதேச ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) உறுப்பினர்களிடம் ஒபாமா கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபத் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவில்லை எனில், அது வெள்ளை மாளிகைக்குள் ஜனநாயகக் கட்சி உள்நுழைவதை தடுக்கும் என ஒபாமா குறித்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பைடனால் நிச்சயம் வெற்றிபெற முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஜோ பைடனிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.

இதிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் மூத்த ஆளுமைகளான ஒபாமா மற்றும் பெலோசி போன்றோர் பைடனின் தேர்தலில் போட்டியிடும் முடிவை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளமை புலப்படுகின்றது.

எனினும், இந்த வலியுறுத்தலை பைடன் நிராகரித்துள்ளதாகவே தெரியவருகின்றது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை (Donald Trump) தோற்கடித்தது போன்று இம்முறையும் வெற்றிபெறும் நம்பிக்கையில் பைடன் உள்ளதாக அவரின் துணை பிரசார மேலாளர் குவென்டின் ஃபுல்க்ஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...