tamilni 173 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது: ஜேர்மன் சேன்ஸலர் புலம்பல்

Share

ஒரு காலத்தில் புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

புலம்பெயர்தலை எளிதாக்க திட்டம் வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், இன்று, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது என்று அறிக்கை விடும் அளவுக்கு அவருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

ஜேர்மனியில் கடந்த ஆண்டில் மட்டும் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 351,915, இது முந்தைய ஆண்டைவிட 51.1 சதவிகிதம் அதிகமாகும்.

ஜேர்மனியில், புலம்பெயர்தல் இன்று பெரிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. புதிதாக ஜேர்மனிக்கு வருவோருக்கு இடமளிப்பது கடினமான விடயமாகிவிட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, ஜேர்மன் சேன்ஸலரும், 16 மாகாண ஆளுநர்களும் கூடி, அதிக அளவிலான புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...