tamilni 173 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது: ஜேர்மன் சேன்ஸலர் புலம்பல்

Share

ஒரு காலத்தில் புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

புலம்பெயர்தலை எளிதாக்க திட்டம் வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், இன்று, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது என்று அறிக்கை விடும் அளவுக்கு அவருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

ஜேர்மனியில் கடந்த ஆண்டில் மட்டும் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 351,915, இது முந்தைய ஆண்டைவிட 51.1 சதவிகிதம் அதிகமாகும்.

ஜேர்மனியில், புலம்பெயர்தல் இன்று பெரிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. புதிதாக ஜேர்மனிக்கு வருவோருக்கு இடமளிப்பது கடினமான விடயமாகிவிட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, ஜேர்மன் சேன்ஸலரும், 16 மாகாண ஆளுநர்களும் கூடி, அதிக அளவிலான புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...