1 17 scaled
உலகம்செய்திகள்

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

Share

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

இத்தாலியின் மிகவும் தேடப்பட்ட மாஃபியா தலைவன் கைதான நிலையில், தற்போது மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மிகவும் கொடூரமான Cosa Nostra என்ற மாஃபியா குழுவுக்கு தலைவனான Matteo Messina Denaro என்பவரே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகள் பொலிசாருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் பொலிசாரிடம் சிக்கினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டைருந்த இவர், கடந்த மாதம் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இத்தாலியின் பல எண்ணிக்கையிலான கொலைகளுக்கு முதன்மை காரணம் டெனாரோ என்பவர் என்றே நம்பப்படுகிறது.

2002ல் இவர் மீதான கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலே ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். தமது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என முன்னர் ஒருமுறை இவர் குறிப்பிட்டது, இத்தாலியில் பரவலாக பேசப்பட்டது.

1993ல் இருந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், அதன் பின்னர் தமது சகாக்களால் மாஃபியா தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை கோமா நிலைக்கு சென்றதை அடுத்து தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீவிரமான சிகிச்சை ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என டெனாரோ கோரிக்கை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...