14 16
உலகம்செய்திகள்

உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம்

Share

உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம்

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சியோல் எச்சரித்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வடகொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்த ஒருநாள் கழிந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசர பபாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இந்த நிலைமைக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உளவு அமைப்பின் கூற்றுப்படி, 1,500 வடகொரிய துருப்புக்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு வந்துள்ளன மேலும் 10ஆயிரம் பேர் விரைவில் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் பொல்டாவா பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஒன்று மீட்கப்பட்டதன் மூலம், இந்தப்போரில், வடகொரியா, ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய செய்தியும் வெளியாகியுள்ளது.

மொஸ்கோவும், பியோங்யாங்கும் அண்மைய மாதங்களில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளில், அவரை தமது நெருங்கிய தோழர் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைத்தமை பேசு பொருளாக மாறியிருந்தது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...