வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சிரிக்கத் தடை விதிக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்கு வட கொரிய மக்கள் சிரிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, மற்றும் பிறந்தநாள் விழாக்கள், ஏனைய விழாக்களைக் கொண்டாடக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பத்து நாட்களில் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிம் ஜோங் இல்லின் மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வடகொரியாவில் இம்முறையானது கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment