பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க மீண்டும் நைட் லைன் ரயில் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த மார்ச் 2020 முதல், கொவிட் தொற்று பரவல் காரணமாக, லண்டன்வாசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இரவு நேரங்களில் நகரை முடக்குவது தொடர்பில் கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இரவு நேரங்களில், நிலத்தடி ரயில் சேவைகள் இயங்குவதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அண்மைக்காலமாக, லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் லண்டன் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய மற்றும் விக்டோரியா மாநிலங்களுக்கிடையில், இரண்டு நைட் டியூப் லைன் சேவைகள் மீண்டும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ட்யூப் லைன் சேவை மத்திய லண்டனுக்கு சேவை செய்கிறது. மத்திய லண்டனில் இருந்து அதிகாலை 1 மணிக்கு விக்டோரியா நோக்கி புறப்படும் ரயில், மீண்டும் அதிகாலை 5.30 மணிக்குஅங்கிருந்து மத்திய லண்டனுக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://tamilnaadi.com/news/2021/10/13/night-tube-line-services-again/
Reference
Night Tube Service To Return This Weekend — But There’s A Twist
Leave a comment