6 31 scaled
உலகம்செய்திகள்

அடுத்த ஆண்டு ரிஷி கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றிவிடுவோம்: எதிர்க்கட்சியினர் உற்சாகம்

Share

அடுத்த ஆண்டு ரிஷி கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றிவிடுவோம்: எதிர்க்கட்சியினர் உற்சாகம்

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, எதிர்க்கட்சியினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்கொட்லாந்தின் Rutherglen and Hamilton West தோகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், லேபர் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. லேபர் கட்சி வேட்பாளரான Michael Shanks 17,845 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இது ஸ்கொட்லாந்தின் பெரிய கட்சியான SNP கட்சியின் வேட்பாளரான Katy Loudonஐ விட 9,446 வாக்குகள் அதிகமாகும்.

இந்த வெற்றி, வரும் பொதுத்தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது என்பதால், இதே நிலை பொதுத்தேர்தலிலும் நீடிக்குமானால், லேபர் கட்சி, பிரதமர் பதவியை பிடிப்பதற்கு அது வழிவகை செய்யக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், லேபர் கட்சியின் தலைவரான Sir Keir Starmer, லேபர் கட்சியால் அடுத்த ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றி, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் கொண்டுவரமுடியும், இன்று அந்த பயணத்தின் ஒரு பகுதியை நாம் காண்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...