24 6612b07452fb2
உலகம்செய்திகள்

உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று

Share

உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று

கோவிட் வைரஸின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில், மற்றுமொரு பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு பரவ ஆரம்பித்துள்ள பெருந்தொற்றாக தற்போது தனிமையே அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தனிமை என்பது பல தலைமுறைகளாக பலரை மிக மோசமாக பாதிக்கும் ஒன்றாக மாறி வருவதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த பெருந்தொற்றானது கடுமையாகப் பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக 45 முதல் 65 வயதான நடுத்தர வயதானவர்களையே இது கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2002 முதல் 2020 வரை அமெரிக்கா மற்றும் 13 ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் பல கோடி பேரைப் பாதிக்கும் தனிமையானது ஒரு மிகப் பெரிய பொதுச்சுகாதார பிரச்சினையாக கருதப்படுகிறது.

அத்துடன் தனிமை என்பது தொற்றுநோயை போல மிக வேகமாக சமூகத்தைப் பாதித்து வருவதாகவும், இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டன் மற்றும் ஜப்பான் போன்ற பிற நாடுகள் இந்த பிரச்சினையை சரி செய்யத்தனியாக அமைச்சகங்களை உருவாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....