24 662cde692e26f
உலகம்செய்திகள்

ரஷ்ய-உக்ரைன் போரின் நகர்வு: அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

ரஷ்ய-உக்ரைன் போரின் நகர்வு: அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

உக்ரைனுக்கு 6 பில்லியன் டொலர் பெறுமதியான நீண்ட கால இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் நேறையதினம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது இதுவரை உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளில் மிகவும் அதிக தொகைக்கு வழங்கப்படும் உதவி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் மூலம், உக்ரைனிய இராணுவத்திற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதில் ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான முக்கியமான இடைமறிப்பு ஆயுதங்கள், குறிப்பிடத்தக்க அளவு பீரங்கி வெடிமருந்துகள் உட்பட்ட ஆயுதங்கள் அடங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த புதன்கிழமை உக்ரைனுக்கான 95 பில்லியன் டொலர் கூடுதல் உதவிப் பொதியில் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து அமெரிக்க பங்குகளில் இருந்து உக்ரைனுக்கு விரைவாக உபகரணங்களை வழங்கும் 1 பில்லியன் தொகுப்பை அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...