tamilni 401 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

Share

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை அலுவலகம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா புதிய புலம்பெயர்தல் விதிகள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறியது.

பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள், இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்தது.

அதாவது, பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதாக கூறி, புலம்பெயர்தலைக் கடுப்படுத்துவதற்காகவே உள்துறைச் செயலர் இந்த விதிகளை அறிமுகம் செய்ய இருந்தார்.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், வெளிநாட்டு மாணவர்களும், முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்களும், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதைத் தடுப்பதற்காக, அவர்களைக் குறிவைத்தே இந்த விதியைக் கொண்டு வர திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, முன்னர் அறிவிக்கப்பட்டது போல, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்னும் விதியில், 38,700 பவுண்டுகள் என்னும் தொகை, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

உள்துறை அலுவலக அமைச்சரான Lord Sharpe of Epsom, இப்போதைக்கு, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் வருவாய் உள்ள பிரித்தானியர்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

என்றாலும், இது இப்போதைக்குத்தான் என்றும், பின்னர் இந்த தொகை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எப்போது அந்த மாற்றங்கள்செய்யப்படும் என்பது குறித்து சரியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிடும் உள்துறை அலுவலகம், குழப்பம் உண்டாக்கிக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...