உலகம்செய்திகள்

ஜோ பைடனின் கோரிக்கைக்கு இணங்க மறுத்த இஸ்ரேல் பிரதமர்

tamilni 316 scaled
Share

ஜோ பைடனின் கோரிக்கைக்கு இணங்க மறுத்த இஸ்ரேல் பிரதமர்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நிராகரித்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நீடிக்கும் வரை, பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என நேதன்யாஹுவிடம், ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார்.

இருப்பினும் இந்த கோரிக்கையை நேதன்யாஹு அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சில நாடுகள் தங்களுக்கென தனி இராணுவம் வைத்துக்கொள்ளாமல் இருப்பது போல் பாலஸ்தீனத்தையும் இராணுவம் இல்லாத தனி நாடாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நேதன்யாஹுவிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...