25 684befec06672
உலகம்செய்திகள்

போர் பதற்றத்திற்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு-மோடிக்கிடையில் கலந்துரையாடல்

Share

இந்திய பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.

இதனிடையே, ஈரானில் உள்ள அணு உலைகள், அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் இன்று(13) அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் உள்பட 70 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் இன்று பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்,

“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வளர்ந்து வரும் நிலைமை குறித்து அவர் எனக்கு விளக்கினார். இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட நான், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...