rtjy 337 scaled
உலகம்செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய பிரதமர்

Share

காசா போர் விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிவிட்ட சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவென்றின் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் 23வது நாளை கடந்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையை வெளியிட்டார், இது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது நட்பு நாடுகளிடமிருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் அவர் தனது வார்த்தைகளை சரிசெய்து, தவறு செய்ததாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதலைத் தடுக்க அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் தவறிவிட்டதாக நெதன்யாகு சனிக்கிழமை இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில், நெதன்யாகு தனது பதிவை அகற்றிவிட்டு, ஒரு புதிய பதிவில் “நான் தவறு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு, தான் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், (IDF) தலைமைத் தளபதிகள், தளபதிகள் மற்றும் படையினருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....