tamilni 178 scaled
உலகம்செய்திகள்

டிக் டொக் செயலிக்கு தடை

Share

டிக் டொக் செயலிக்கு தடை

நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டொக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், நேபாளத்தில் தனது ஆதிக்கங்களை அதிகரிக்க சீனா தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.

சீனாவிற்கு எதிராக நேபாள அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் டிக்டொக்கில் 1,629 சைபர் குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தின் பல மத மற்றும் கலாச்சார இடங்களில் டிக்டொக் காணொளிகளை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பே இந்தியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக்கை தடை செய்துள்ளன. தெற்காசியாவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக டிக்டொக்கை தடை செய்யும் மூன்றாவது நாடாக நேபாளம் மாறியுள்ளது.

இந்தியா 2021 ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தானில் 2022 ஆம் ஆண்டிலும் டிக்டொக்கை தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...