10 4 scaled
உலகம்செய்திகள்

காஸா எல்லையில் மாயமாகியுள்ள கனேடிய தம்பதி: அச்சத்தில் மகள்

Share

காஸா எல்லையில் மாயமாகியுள்ள கனேடிய தம்பதி: அச்சத்தில் மகள்

கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் காஸா எல்லையில் இருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒருவார காலமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்களது மகள்.

70 வயதான Judih Weinstein மற்றும் 72 வயதான Gad Haggai ஆகிய இருவருமே, ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதல் சம்பவத்தையடுத்து மாயமாகியுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி விடிகாலையில் Kibbutz Nir Oz பகுதியில் இவர்கள் இருவரும் நடக்க சென்றுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் அப்பகுதியில் வசித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை முன்னெடுத்தது. சம்பவத்தின் போது குடும்ப உறுப்பினர்களின் WhatsApp குழுவில் பதிவு செய்துள்ள அவர்கள்,

இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர், தம்பதி தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்துவரும் அவர்களின் மகள் பீதியடைய ஆரம்பித்ததுடன், தொடர்பு கொள்ளக்கூடிய எவரையும் அழைத்து அவர் விசாரித்துள்ளார். இந்த நிலையில், kibbutz அவசர மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்த தகவலில்,

அந்த தாயார் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், அவரது கணவர் மிக மோசமாக காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் இஸ்ரேல் அதிகாரிகள், கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடமும் தமது பெற்றோர் தொடர்பில் பேசியதாகவும்,

ஆனால் சாதகமான எந்த பதிலும் தமக்கு கிடைக்கவில்லை என அந்த மகள் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...