24 6611ac70585af
உலகம்செய்திகள்

எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்

Share

எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்க (America) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது மூன்று ரொக்கெட்டுகளை ஏவ உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மூன்று ரொக்கெட்டுகளும் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள அதன் (Wallops Flight Facility) வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியில் இருந்து ஏவப்படவுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை சந்திரனின் நிழல் பகலை இரவாக மாற்றுவதற்கு முன், இந்த மூன்று ரொக்கெட்டுகளை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியில் ஏற்படும் திடீர் மாற்றம் அயனோஸ்பியரை (Ionosphere) எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய போதுமான தரவுகளை சேகரிப்பதே நாசாவின் முக்கிய குறிக்கோள் என்று கூறியுள்ளது.

மேலும் இந்த சூரிய கிரகணம்(solar eclipse)வானொலி மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...