4 2 scaled
உலகம்செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

Share

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன், செல்போன் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வசித்து வரும் தம்பதி சீனிவாச கிருஷ்ணகுமார் – சைனஜா. இவர்களது மகள் வைஷ்ணவி (20), மகன் ஸ்ரீராம் (14).

8ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீராம், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் கேமில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாய் சைனஜா அவரை கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் நேற்று இரவும் சிறுவன் கேம் விளையாடியுள்ளார்.

மீண்டும் சைனஜா மகனை கண்டித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் காரணமாக மன விரக்தியடைந்த ஸ்ரீராம், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...