7 19 scaled
உலகம்செய்திகள்

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

Share

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவரின் செல்போனை குரங்கு பள்ளத்தாக்கில் வீசியதால் தேடுதல் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

கேரளா மாநிலத்தில் பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியதுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவர் உள்ளூர் மக்களிடம் உதவியைக் கேட்டுள்ளார். அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.

ஆகவே தீயணைப்பு துறையினரிடம் உதவியைக்கேட்டுள்ளனர். ஆனால் மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.

பின் செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், செல்போனை மீட்டு தருமாறுக் கேட்டுள்ளார். எனவே தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக தேடுதல் பணியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...