21
உலகம்செய்திகள்

மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!!

Share

மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!!

இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசவாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்து பேசப்படும் எனத்தெரிகிறது. ஆனால் ரஷியா அல்லது சீனா குறித்து பேச்சு இடம்பெறாது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிர்பி கூறுகையில் ”இந்திய பிரதமர் மோடியின் வருகை சுதந்திரமான, திறந்த, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ- பசிபிக் பகுதிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.

இருநாட்டின் உறவை மேம்படுத்துவதற்கான சந்திப்பாக இருக்கும். இதுதான் எங்களுக்கு முக்கியம். இந்த சந்திப்பு மூலம் பிரதமர் மோடியையோ அல்லது இந்திய அரசையோ வேறு ஏதாவது செய்ய வற்புறுத்துவது அல்ல. வெள்ளை மாளிகையில் இது ஒரு பெரிய வாரம். மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் நமது மூலோபாய கூட்டாண்மையை உயர்த்தும். இந்தியா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுத்த விரும்புகிறோம். இந்தியா மபெரும் சக்தியாக உருவெடுக்க நாங்கள் ஆதரவு அளிப்போம். மோடியின் அமெரிக்க வருகை ரஷியா அல்லது சீனா குறித்தது அல்ல” என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...