உலகம்செய்திகள்

ரஷ்ய ஜெனரலிடம் இளம்பெண் கொடுத்த மொபைல் போன்: அதிரவைக்கும் சம்பவம்

Share

ரஷ்ய ஜெனரலிடம் இளம்பெண் கொடுத்த மொபைல் போன்: அதிரவைக்கும் சம்பவம்

புடினுடைய ஜெனரல் ஒருவரிடம் பெண் ஒருவர் கொடுத்த மொபைல் வெடித்துச் சிதறியதில், அவரும் அவரது மகனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய ஜெனரல்களில் ஒருவரான Yuri Afanasevskii (64) Luhanskஇல் உள்ள தனது வீட்டிலிருக்கும்போது, பெண் ஒருவர் அவருக்கு மொபைல் போன் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அவர் அந்த போனை ஆன் செய்தவுடன், அது பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. போன் வெடித்ததில் படுகாயமடைந்த Yuriயும் அவரது மகனும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடைய மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பெண் கைது செய்யபட்டுள்ளார். ஜெனரலை கொல்ல முயற்சி என்னும் கோணத்தில் ரஷ்ய அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உக்ரைன் உளவுத்துறை இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் தரப்பில் அந்த மொபைல் போனுக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை Yuriயிடம் கொண்டு சேர்க்க அந்த பெண்ணை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் எராளமானோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த கொலை முயற்சி சம்பவத்துடன் தொடர்புடைய பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...