நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்
உலகம்செய்திகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்

Share

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்

நான்கு ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான சிறுமி ஒருத்தி, 18 வயது இளம்பெண்ணாக திரும்பிவந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா (Alicia Navarro), 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.

அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள்.

இந்நிலையில், திடீரென கனடா எல்லையிலுள்ள Montana மாகாண பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவர் நுழைந்துள்ளார். தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

ஒரு பக்கம், அலிஷியா உயிருடன் பத்திரமாக வீடு திரும்பிய விடயம் அவளது பெற்றோருக்கும் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம், அவள் எங்கு சென்றால், நான்கு ஆண்டுகளாக எங்கிருந்தாள் என்பது குறித்த விடயங்கள் தெரியாததால் பொலிசார் திகைப்படைந்துள்ளார்கள்.

அலிஷியா சற்று ரிலாக்ஸ் ஆக நேரம் கொடுத்துள்ள பொலிசார், அவளுக்கு என்ன ஆனது என்பது குறித்து பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....