ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி

Share

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உயிரற்ற உடல், நீர் நிலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

பெர்லினில் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டு இளம்பெண்ணான மரியா (Maria Fernanda Sanchez, 24), கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி மாயமானார்.

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்துள்ள துயர செய்தி | Mysterious Foreign Teenager In Germany

அவர் தங்கியிருந்த குடியிருப்பில் அவர் தனது மொபைலை விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது. அவர் எங்கு போனார் என்பது அந்தக் குடியிருப்பில் இருந்த யாருக்குமே தெரியவில்லை.

மெக்சிகோ நாட்டு ஜனாதிபதியான Andres Manuel Lopez Obrador, மரியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்துமாறு ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeierஐ கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை, பெர்லினிலுள்ள Adlerhof என்னுமிடத்தில், வாய்க்கால் ஒன்றில் மரியாவின் உயிரற்ற உடல் கிடப்பதை அவ்வழியாக நடந்து சென்ற ஒருவர் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

மரியாவின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மாயமான மரியா உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...