ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி

Share

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உயிரற்ற உடல், நீர் நிலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

பெர்லினில் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டு இளம்பெண்ணான மரியா (Maria Fernanda Sanchez, 24), கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி மாயமானார்.

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்துள்ள துயர செய்தி | Mysterious Foreign Teenager In Germany

அவர் தங்கியிருந்த குடியிருப்பில் அவர் தனது மொபைலை விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது. அவர் எங்கு போனார் என்பது அந்தக் குடியிருப்பில் இருந்த யாருக்குமே தெரியவில்லை.

மெக்சிகோ நாட்டு ஜனாதிபதியான Andres Manuel Lopez Obrador, மரியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்துமாறு ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeierஐ கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை, பெர்லினிலுள்ள Adlerhof என்னுமிடத்தில், வாய்க்கால் ஒன்றில் மரியாவின் உயிரற்ற உடல் கிடப்பதை அவ்வழியாக நடந்து சென்ற ஒருவர் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

மரியாவின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மாயமான மரியா உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...