rtjy 160 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்

Share

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு குறித்த தாக்குதல்களை நடத்தியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட், ஏவுகணை, துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளான டொவிவ், கிர்யத் ஷமொனாவை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த ஏவுகணை தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிகழ்வு போரை விரிவுபடுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...