23 10
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் இறக்குமதி: பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த அரசாங்கம்

Share

மசகு எண்ணெய் இறக்குமதி: பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த அரசாங்கம்

தவறான முன்கூட்டிய கணிப்பு காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதியில் அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டத்தை சந்தித்துள்ளது.

வர்த்தக புலனாய்வுப்பிரிவாக நிறுவப்பட்ட எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளின் தவறான கணிப்பால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரும் என அதிகாரிகள் கூறிய தவறான கணிப்பால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஜூலை மாதம் 83.93 டொலராக இருந்த மசகு எண்ணெய் விலை ஆகஸ்ட் மாதத்தில் பீப்பாய்களுக்கு 82.52 டொலராக குறைந்துள்ளது.

இதனால் ஆகஸ்ட் மாதம் மசகு எண்ணெய் விலை உயரும் என வெளியான தவறான அறிக்கையுடன் கச்சா எண்ணெய் கப்பலை அனுப்பியதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென மசகு எண்ணெய் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...