23 10
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் இறக்குமதி: பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த அரசாங்கம்

Share

மசகு எண்ணெய் இறக்குமதி: பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த அரசாங்கம்

தவறான முன்கூட்டிய கணிப்பு காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதியில் அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டத்தை சந்தித்துள்ளது.

வர்த்தக புலனாய்வுப்பிரிவாக நிறுவப்பட்ட எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளின் தவறான கணிப்பால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரும் என அதிகாரிகள் கூறிய தவறான கணிப்பால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஜூலை மாதம் 83.93 டொலராக இருந்த மசகு எண்ணெய் விலை ஆகஸ்ட் மாதத்தில் பீப்பாய்களுக்கு 82.52 டொலராக குறைந்துள்ளது.

இதனால் ஆகஸ்ட் மாதம் மசகு எண்ணெய் விலை உயரும் என வெளியான தவறான அறிக்கையுடன் கச்சா எண்ணெய் கப்பலை அனுப்பியதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென மசகு எண்ணெய் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...