1 68
உலகம்செய்திகள்

கனடிய குடிவரவு முறையில் மேலும் சில மாற்றங்கள்!

Share

கனடாவின் குடிவரவு மற்றும் ஏதிலி கோரிக்கை நடைமுறைகளில் மேலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

கனடாவின் குடிவரவு ஏதிலிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லர் இந்த முன்மொழிவினை சமர்ப்பித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அண்மையில் கனடிய மத்திய அரசாங்கம் நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் தொடர்பில் பல்வேறு கடுமையான நடைமுறைகளை அறிமுகம் செய்திருந்தது.

குறிப்பாக தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் தொடர்பிலும் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், கனடாவில் ஏதிலி கோரிக்கையாளர் ஒருவரின் விண்ணப்பம் பரிசீலனை செய்வதற்கு 44 மாதங்கள் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது என கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடிய ஏதிலி கோரிக்கை நடைமுறை உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என மில்லர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் சில மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...