உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

Screenshot 2024 01 31 063750 670x430 1
Share

பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

பிரித்தானியாவில், படகொன்றில் கொண்டுவரப்பட்ட குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த புலம்பெயர்ந்தோர் ஆறு பேர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 9.40 மணியளவில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் படகொன்று தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு சசெக்சிலுள்ள Newhaven என்னுமிடத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர், மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிசார் விரைந்துள்ளனர்.

அப்போது படகொன்றில் வந்த குளிரூட்டபட்ட லொறி ஒன்றிற்குள் புலம்பெயர்ந்தோர் சிலர் அடைபட்டிருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு, எசெக்சில் இதேபோல லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த 39 புலம்பெயர்ந்தோர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, இம்முறை லொறிக்குள் அடைபட்டிருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். பெரும் அசம்பாவிதம் ஒன்று தவிர்க்கப்பட்டாலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...