tamilni 71 scaled
உலகம்செய்திகள்

ஒரே ஆண்டில் புலம்பெயர்ந்தோர் வருகை இருமடங்காக அதிகரிப்பு… திணறும் ஐரோப்பிய நாடு

Share

பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக்கின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் வருகை 36 சதவிகிதம் சரிவடைந்த நிலையில், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்னெடுத்த ருவாண்டா திட்டம் காரணமாக 2023ல் புலம்பெயர்ந்தோர் வருகை எண்ணிக்கை பெருமளவு சரிவு கண்டுள்ளது.

ஆனால் ஸ்பெயின் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 57,000 பேர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இருமடங்கு என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் கடந்த ஆண்டு செனகல் மற்றும் மொரிட்டானியா போன்ற நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்புகளை தீவிரப்படுத்தியதுடன், புலம்பெயர் மக்களின் பயணத்தை கட்டுப்படுத்தவும் கோரியிருந்தது.

மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்கள், ஹொட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் புலம்பெயர் மக்களுக்கு கூடுதல் அவசர விடுதிகளை உருவாக்க வேண்டியிருந்தது.

மொத்தம் 56,852 புலம்பெயர் மக்கள் 2023ல் நிலம் அல்லது கடல் வழியாக ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 2018க்கு பின்னர் மிகப் பெரிய எண்ணிக்கை இதுவென்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, 2024ம் ஆண்டிலும் புலம்பெயர் மக்களின் வருகை தொடர்வதாகவே கூறப்படுகிறது. திங்களன்று மட்டும் 6 சிறு படகுகளில் மொத்தம் 287 சட்டவிரோத புலம்பெயர் மக்கள் ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...