12 24
உலகம்செய்திகள்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

Share

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஐந்து ஊடகவியலாளர்கள் இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே அவர்களின் ஒளிபரப்பு வான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டனர்.

பெரிய சிவப்பு எழுத்துக்களில் “PRESS” என்று குறிக்கப்பட்ட வாகனம் மோதிய போது, ​​மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போது, குறித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) போலந்து செல்ல உள்ள நிலையில், அவர் போலந்து (Poland) வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று அந்நட்டு அரசு தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தில் (Palestine) ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...