12 24
உலகம்செய்திகள்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

Share

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஐந்து ஊடகவியலாளர்கள் இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே அவர்களின் ஒளிபரப்பு வான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டனர்.

பெரிய சிவப்பு எழுத்துக்களில் “PRESS” என்று குறிக்கப்பட்ட வாகனம் மோதிய போது, ​​மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போது, குறித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) போலந்து செல்ல உள்ள நிலையில், அவர் போலந்து (Poland) வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று அந்நட்டு அரசு தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தில் (Palestine) ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...

1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...