24 6694dc350b814
உலகம்செய்திகள்

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

Share

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் செம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா அணி தனதாக்கியுள்ளது.

கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா அணி தனதாக்கிக்கொண்டது.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

பரபரப்பாக ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் அடிக்கவில்லை.

அதன் பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதன்படி போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார்.

இது ஆர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....