24 6694dc350b814
உலகம்செய்திகள்

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

Share

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் செம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா அணி தனதாக்கியுள்ளது.

கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா அணி தனதாக்கிக்கொண்டது.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

பரபரப்பாக ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் அடிக்கவில்லை.

அதன் பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதன்படி போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார்.

இது ஆர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...