2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?
உலகம்செய்திகள்

2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?

Share

2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்குதல் என இதுவரையிலும் 6 பேரின் உயிரை எடுத்துள்ளது.

இதுதொடர்பில் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன, இதன்போது 2500 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் மம்தா சிங்.

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தின்போது 2500 பேர் நல்ஹர் மஹாதேவ் கோவிலில் அகப்பட்டுக்கொண்டனர்.

இந்த தகவலை அறிந்த உள்துறை அமைச்சர் அணில் விஜி உடனே அந்த இடத்தின் கூகிள் லொகேஷனை மம்தா சிங்கிற்கு அனுப்ப, அவர் காவல் படையினரோடு அந்த இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த மம்தாவுக்கு அதில் ஏனோ பெரிய ஈடுபாடில்லை. அதனால் மருத்துவ படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தேர்வெழுதி 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.

காவல்துறைக்கு இவரது தொடர்ச்சியான பங்களிப்பு இவருக்கு நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்று தந்தது.

மனித உரிமை ஆணையத்திற்கான விசாரணை, மேற்கு வங்காளம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அப்ரேஷன்களின் போது மனிதஉரிமை மீறல்களை கையாண்டது என பல நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் இவரை பாராட்டியுள்ளது.

அதோடு அவரின் காவல்த்துறை சேவையை பாராட்டும் விதமாக 2022 குடியரசு தினத்தின் போது ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது.

ரகசிய வலைப்பின்னல்கள் மூலம் குற்றத்தை களைவது மற்றும் மாபியா குழுக்களை ஒழிப்பதில் இவர் பங்கு முக்கியமானதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...