2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?
உலகம்செய்திகள்

2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?

Share

2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்குதல் என இதுவரையிலும் 6 பேரின் உயிரை எடுத்துள்ளது.

இதுதொடர்பில் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன, இதன்போது 2500 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் மம்தா சிங்.

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தின்போது 2500 பேர் நல்ஹர் மஹாதேவ் கோவிலில் அகப்பட்டுக்கொண்டனர்.

இந்த தகவலை அறிந்த உள்துறை அமைச்சர் அணில் விஜி உடனே அந்த இடத்தின் கூகிள் லொகேஷனை மம்தா சிங்கிற்கு அனுப்ப, அவர் காவல் படையினரோடு அந்த இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த மம்தாவுக்கு அதில் ஏனோ பெரிய ஈடுபாடில்லை. அதனால் மருத்துவ படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தேர்வெழுதி 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.

காவல்துறைக்கு இவரது தொடர்ச்சியான பங்களிப்பு இவருக்கு நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்று தந்தது.

மனித உரிமை ஆணையத்திற்கான விசாரணை, மேற்கு வங்காளம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அப்ரேஷன்களின் போது மனிதஉரிமை மீறல்களை கையாண்டது என பல நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் இவரை பாராட்டியுள்ளது.

அதோடு அவரின் காவல்த்துறை சேவையை பாராட்டும் விதமாக 2022 குடியரசு தினத்தின் போது ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது.

ரகசிய வலைப்பின்னல்கள் மூலம் குற்றத்தை களைவது மற்றும் மாபியா குழுக்களை ஒழிப்பதில் இவர் பங்கு முக்கியமானதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...