tamilni 180 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்கும் மெக்டொனால்ட்ஸ்

Share

இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்கும் மெக்டொனால்ட்ஸ்

ஹமாஸுடன் போர் தொடுக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கு மெக்டொனால்ட்ஸ் இலவச உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிராக நடந்து வரும் போரில் இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக லெபனானில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலின் மெக்டொனால்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

“நாங்கள் ஏற்கனவே மருத்துவமனைகள் மற்றும் இராணுவப் பிரிவுகளில் 4,000 பேருக்கு உணவை வழங்கினோம். ஒவ்வொரு நாளும் களத்தில் உள்ள வீரர்களுக்கு உணவளிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

மேலும் இந்த நோக்கத்திற்காக ஐந்து உணவகங்களைத் திறந்துள்ளோம்” என்று இஸ்ரேலில் உள்ள மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் அக்டோபர் 13 அன்று இஸ்ரேலிய படைகளுக்கு இலவச உணவு வழங்கும் நிறுவனமான மெக்டொனால்டின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

லெபனானின் ஸ்பின்னீஸில் உள்ள மெக்டொனால்டு பாலஸ்தீனிய குழுக்களால் தாக்கப்பட்டது.

இந்த பின்னணியில், மெக்டொனால்டு ஓமன், காசாவை ஆதரித்து டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது.

மெக்டொனால்டு ஓமான் நிறுவனம் காசாவில் உள்ள முயற்சிகளுக்கு $100,000 நன்கொடை அளித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த கடினமான காலங்களில் நாங்கள் காசாவுக்கு ஆதரவாக நிற்கிறோம். நாம் அனைவரும் காசா மக்களுக்கு உதவுவோம்” என்று மெக்டொனால்ட்ஸ் ஓமான் கூறியுள்ளது.

இந்நிலையில், காசாவில் அக்டோபர் 7ஆம் திகதி நடந்த சண்டையில் இருந்து 724 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,215 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே காலகட்டத்தில் இஸ்ரேலில் 1,300 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...