முதலையுடன் திருமணம்! முத்தம் கொடுத்து நிறைவேற்றிய மேயர்
உலகம்செய்திகள்

முதலையுடன் திருமணம்! முத்தம் கொடுத்து நிறைவேற்றிய மேயர்!

Share

முதலையுடன் திருமணம்! முத்தம் கொடுத்து நிறைவேற்றிய மேயர்

மெக்சிகோவில் நடந்த ஒரு திருமணக் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமணத்தில் ஒரு மேயர் தான் மணமகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மணமகள் யார் என்பதுதான். மேயர் ஒரு முதலையை மணமகளாக ஏற்றுக்கொண்டார்.

தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா (Victor Hugo Sosa), நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படும் பாரம்பரிய விழாவில் ஒரு பெண் முதலையை திருமணம் செய்துகொண்டார்.

அவர் அலிசியா அட்ரியானா என்ற பெண் முதலையை இந்த பாரம்பரிய விழாவில் திருமணம் செய்து கொண்டார். Caiman இனத்தைச் சார்ந்த இந்த முதலை, உள்ளூர் கதைகளில் “இளவரசி பெண்” குறிப்பிடப்பட்டுள்ளது.

சோண்டல் மற்றும் ஹுவே பழங்குடியினக் குழுக்களுக்கு இடையேயான அமைதியை நினைவுகூரும் வகையில் இந்த திருமண சடங்கு 230 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

மேயர், சோண்டல் பழங்குடியினரின் மன்னராக உருவெடுத்து, முதலையை மணந்து, இரு கலாச்சாரங்களின் ஐக்கியத்தை அடையாளப்படுத்துகிறார்.

சடங்கின் ஒரு பகுதியாக, பாரம்பரிய வெள்ளை நிற திருமண ஆடையில் மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட முதலை திருமண இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மணமக்கள் கிராம வீதி வழியாக இசைக்கருவிகள் மற்றும் இசைக்கருவிகள் மேளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தெருவில் நடந்து செல்லும் போது மேயர் மணமகளை கையில் எடுத்தார். மேயர் மணமகளை முத்தமிட்டவுடன் திருமண விழா முடிந்தது. முதலைக்கு முத்தம் கொடுக்கும்போது கடிக்காமல் இருக்க அதன் வாயை கட்டிவைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான திருமணத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வித்தியாசமான திருமணம் ஒக்ஸாவில் நடந்தது. முதலி சோண்டல் சமூகத்தால் பூமியின் பிரதிநிதியாக மதிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...