நாடாளுமன்றத்தில் பாரிய தீ விபத்து (புகைப்படங்கள்)

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறியதுடன், வானத்தை நிரப்பும் கரும்புகையும் வெளியேறியமை வெளியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

South Africa 01

இதேவேளை பாராளுமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச் சடங்கு பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதேவேளை தீ கட்டுக்குள் வரவில்லை என்றும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#WorldNews

Exit mobile version