ee7e61464b5b4490d5c599b30cd7e766d8fa313e 16x9
உலகம்செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்: கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவன் உட்பட 11 பேர் பலி!

Share

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா நகரில், கால்பந்து மைதானம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

கால்பந்து போட்டி ஒன்று முடிவடைந்த வேளையில், திடீரென மைதானத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.

இந்தத் கொடூரத் தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை ஒரு பரந்த “குற்ற அலையின்” (Crime Wave) ஒரு பகுதி என சாலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ வர்ணித்துள்ளார். மேலும், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த உதவுமாறு மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குவானாஜுவாடோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் இது குறித்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்த கூட்டாட்சி அதிகாரிகளுடன் (Federal Authorities) இணைந்து செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளை அச்சுறுத்தி பணிய வைக்க முயற்சிக்கும் குற்றவியல் கும்பல்களின் இத்தகைய செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மேயர் சீசர் பிரிட்டோ தனது முகநூல் பக்கத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...