Diana Gamage 400x240 1
செய்திகள்இலங்கை

டயானா கமகேவுக்கு எதிரான கடவுச்சீட்டு மோசடி வழக்கு: பிப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Share

பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றமை மற்றும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

விசா இன்றி தங்கியிருந்தமை: 2016 ஜூலை 14 முதல் 2020 நவம்பர் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை.

கடவுச்சீட்டு மோசடி: குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குப் பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...