25 68444cc754912
இந்தியாஉலகம்செய்திகள்

கனடாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க் கார்னி

Share

கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த அழைப்பை, தொலைபேசி வாயிலாக விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோசமான ராஜதந்திர முறுகல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த அழைப்பு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா ஜி7 நாடுகளின் உறுப்பினர் அல்ல என்ற போதிலும், 2025 ஜூன் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெறும், வருடாந்த கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனடாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள, இந்திய பிரதமர்மோடி, இந்தியாவும் கனடாவும் புதுப்பிக்கப்பட்ட உறவுடன், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலையில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளதாக, கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.

எனினும் இந்த குற்றச்சாட்டை புதுடில்லி மறுத்ததுடன், கனேடிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. பதிலுக்கு கனடாவும் இந்திய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.

இந்தியாவை பொறுத்தவரை, அது, கனடாவின் 10வது பெரிய வர்த்தக பங்காளியாகும் இதன்படி, இந்தியாவுக்கு பருப்பு வகை உள்ளிட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக கனடா விளங்குகிறது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...