coping with Patient death
உலகம்செய்திகள்

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

Share

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் சூரஜ் தன் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமும் இருசக்கர வாகனம் கேட்டு அனிதாவை தொல்லை செய்துள்ளனர்.

தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான அனிதா கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் சூரஜ் தனது தந்தையுடன் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்ப நாய் உதவியுடன் அனிதாவின் உடலைக் கைப்பற்றியுள்ளார்.

பொலிஸார் தேடுதல் வேட்டை பின்னர் அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து தப்பியோடிய சூரஜ் குடும்பத்தினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணைக்காக இளம்பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...