1 19 scaled
உலகம்செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை! கருவை கலைத்த தாய்

Share

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை! கருவை கலைத்த தாய்

தமிழக மாவட்டம் அரியலூரில் லொறி ஓட்டுநர் தனது மகளை கர்ப்பமாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). லொறி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர்.

முதல் மனைவிக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அதிர்ச்சிகர விடயம் தெரிய வந்துள்ளது.

சங்கர் தான் மகள் என்றும் பாராமல் மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிய வரவே, இந்த விடயம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என எண்ணிய பெண்ணின் தாய் கருவை கலைக்க முடிவெடுத்துள்ளார்.

அதன்படி மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி மகளுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட மாணவி மயங்கி விழுந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அதனை ஒரு சாக்குப் பையில் சுற்றி வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவிக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டதால், அவரது தாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருக்கலைப்பு நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் போய்சேர அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பின்னர் பொலிஸார் உடனடியாக சங்கர், அவரது மனைவி மற்றும் கருக்கலைப்பு மாத்திரை விற்ற மருந்தாக உரிமையாளர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும் புதைக்கப்பட்ட 7 மாத சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர் சிகிச்சை நடந்து வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...