tamilni 267 scaled
உலகம்செய்திகள்

அதிகரிக்கும் புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கை: நடவடிக்கை எடுக்கவிருக்கும் பிரபல ஆசிய நாடு

Share

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உரிய வேலை வாய்ப்பும் சரிவடைந்துள்ள நிலையில், ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய மலேசியா முடிவெடுத்துள்ளது.

இதன் பொருட்டு 15 நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்களை மலேசியா மறுஆய்வு செய்யும் என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களை குறிப்பிட்ட சில அமைப்புகள் ஏமாற்றும் நடைமுறைகள் அதிகரித்துள்ளதாலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், மலேசியாவிற்கு வந்த பிறகு, தங்களுக்கு உறுதியளித்த வேலை தற்போது இல்லை என்ற நிலையில் குழப்பத்தில் உள்ளனர்.

அத்துடன் வேலையிடத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான துஸ்பிரயோகமும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீப வருடங்களில் பல நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக பயன்படுத்துவதால் அமெரிக்க தடைகளை எதிர்கொண்டுள்ளன.

மட்டுமின்றி பல தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இன்னும் விவசாயம் மற்றும் தோட்டத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஆனால் மற்ற துறைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் தொழிலாளர் மற்றும் உள்விவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...