16 26
இலங்கைஉலகம்செய்திகள்

லோர்ட்ஸ் மைதானத்தில் மஹேல ஜயவர்தனவிற்கு கிடைத்த பெருமை

Share

லோர்ட்ஸ் மைதானத்தில் மஹேல ஜயவர்தனவிற்கு கிடைத்த பெருமை

உலகின் சிறந்த கிரிக்கட் மைதானங்களில் ஒன்றாக போற்றப்படும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மஹேல ஜயவர்தன, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியை மணி அடித்து நேற்றைய தினம் (29.08.2024) ஆரம்பித்து வைத்துள்ளார்.

லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன் இவ்வாறு மணி அடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படும்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் லோர்ட்ஸில் இவ்வாறு மணி அடித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான அர்ஜுன ரணதுங்க, குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், சிதத் வெத்தமுனி, மார்வன் அத்தபத்து ஆகியோரும் நற்குண முன்னேற்ற அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகரவும் லோர்ட்ஸ் மைதானத்தில் மணி அடித்து போட்டியை ஆரம்பித்த பெருமைக்குரிய இலங்கையர்களாவர்.

போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளதை அறிவிக்கும் வகையில் இந்த மணி அடிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...