20 17
இந்தியாஉலகம்செய்திகள்

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

Share

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்ற பெண் ஒருவர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா பொங்கல் சேலையை அணிந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்” என்று கூறியிருந்தார்.

இவரின் பதிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...