tamilni 235 scaled
உலகம்செய்திகள்

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்

Share

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் 33 கோடி லொட்டரியில் வென்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் அரிக்காட் என்ற நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள AI Ain -யில் கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமுடைய ராஜீவ், மூன்று ஆண்டுகளாக The Big Ticket அபு தாபி வாராந்திர குலுக்கல் லொட்டரியில் மூன்று ஆண்டுகளாக பங்கேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளின் பிறந்த திகதிகளைக் கொண்ட லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

அதாவது 7 மற்றும் 13 ஆகிய எண்கள் இடம்பெற்றிருக்கும் டிக்கெட்டை ராஜீவ் வாங்கினார். முன்னதாக, அதே எண்களுடன் ஒரு மில்லியன் திர்ஹம்களை வெல்வதை ராஜீவ் தவறவிட்டார். ஆனால், இம்முறை அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதுகுறித்து ராஜீவ் அரிக்காட் கூறுகையில், ‘நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக AI Ain-யில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன். ஆனால் லொட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

இம்முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த திகதிகள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதே கலவையுடன் ஒரு Whisker மூலம் ஒரு மில்லியன் திர்ஹம்ஸை நான் தவறவிட்டேன். ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி’ என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...