1 25
உலகம்

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

Share

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

Access to Nutrition Initiative என்ற அமைப்பு 30 நாடுகளில், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் Nestle, PepsiCo, Unilever ஆகிய உணவு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக தெரிய வந்துள்ளது.

ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள்தான் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்த உணவுப் பொருட்கள், அதிலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8 மதிப்பெண்ணாகவே இருப்பதாக அதிர்ச்சி அளிக்கிறது இந்த ஆய்வு.

இதுகுறித்து ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே (Mark Wijne) கூறுகையில், “அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை அதிகப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...