1 25
உலகம்

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

Share

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

Access to Nutrition Initiative என்ற அமைப்பு 30 நாடுகளில், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் Nestle, PepsiCo, Unilever ஆகிய உணவு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக தெரிய வந்துள்ளது.

ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள்தான் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்த உணவுப் பொருட்கள், அதிலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8 மதிப்பெண்ணாகவே இருப்பதாக அதிர்ச்சி அளிக்கிறது இந்த ஆய்வு.

இதுகுறித்து ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே (Mark Wijne) கூறுகையில், “அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை அதிகப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...